|
கடனே தான் வாழ்க்கையடா
|
|
|
. |
|
|
Sunday, 09 November, 2008 10:53 AM
|
|
| . | |
|
உலகிலேயே அமெரிக்கர்கள் தான் புத்திசாலிகள் என்று சொன்னால் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். அமெரிக்கர்கள் இதுவரை வென்றுள்ள நோபல் பரிசுகளே இதற்கு சாட்சி. |
|
| . | |
|
ஆனால், அமெரிக்கா வளமான தேசமா? பொருளாதார சீர்குலைவு ஏற்படுவதற்கு முன்வரை அப்படிதான் உலகம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்கர்கள் அனுபவித்து வந்த வளம் கடன் வாங்கியது என்னும் நிதர்சனத்தை உலகம் இன்று புரிந்து கொண்டிருக்கிறது. சராசரி அமெரிக்கர்களின் வாழ்க்கை கடனை அடிப்படையாக கொண்டே அமைந்திருந்தது என்பதை வீட்டுக்கடன் நெருக்கடி யால் உண்டான விபரீதம் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது. கடன் ஆற்றில் பயணிப்பதை உணராமலே இருந்த அமெரிக்கர் கள் அதன் விளைவாக இன்று கடன் வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கர்களின் நிலை ஐயோ பாவம் என சொல்ல வைத்திருப்பதோடு, கடன் அபாயம் பற்றி அமெரிக் கர்களை யாருமே எச்சரிக்கவில்லையா? என்றும் கேட்க வைக்கிறது. கடன் வளம் கண்ணை மறைத்ததால் அமெரிக்கர்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனரே தவிர, எச்சரிக்கை குரல்கள் எழுப்பப்படாமல் இல்லை. தொலைநோக்கு பார்வை கொண்ட பல நிபுணர்கள் அமெரிக்க சமூகம் கடனுக்கு அடிமையாகி வருவதை சுட்டிக்காட்டி எச்சரித்து வந்துள்ளனர். அவற்றில் வலுவாகவும், கலை நயத்தோடும் எழுந்த குரலாக டேனி ஸ்கிக்டரை சொல்லலாம். அந்நாட்டின் பிரபல பத்திரிகையாளரான ஸ்கிக்டர், கடனில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அமெரிக்கர்களுக்கு புரிய வைப்பதற்காக “”கடனில் தான் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” (இன் டெப்ட் வீ டிரஸ்ட்) என்னும் பெயரில் முழு நீள செய்திபடம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார். வீட்டுக்கடன் நெருக்கடி வெடிப்பதற்கு ஓராண்டுக்கு முன்பே 2006ல் இந்த செய்திப் படத்தை உருவாக்கி விட்டார். 90 நிமிடம் ஓடக்கூடிய இந்த படம், அமெரிக்கர்களின் கடன் மோகத்தை அழகாக படம் பிடித்து காட்டியதோடு, அதன் பாதிப்புகளையும் சித்தரித்தது. ஸ்கிக்டர், ஏபிசி நியூஸ், சிஎன்என் போன்ற முன்னணி தொலைக்காட்சி களில் செய்தி தயாரிப்பாளராக பணியாற்றி யிருப்பதோடு, பல முக்கிய செய்திப்படங்களையும் தயாரித்தவர். ஈராக் போரின் உண்மையான பின்னணியை ஆராயும் வகையில் இவர் உருவாக்கிய (தி வெப்பன்ஸ் ஆப் மாஸ் டிசெப்ஷன்) செய்திப்படம், அமெரிக்காவின் பொய்யான நிலைப்பாட்டை அம்பலப் படுத்தியது. செய்திகளின் பின்னணி யில் உள்ள உண்மைகளை பிளந்து வெளியே கொண்டு வரக்கூடியவர் என்பது பாராட்டப்படும் ஸ்கிக்டர், “இன் டெபட் வீ டிரஸ்ட்’ செய்திப்படத்தில் அமெரிக்கர்களின் கடன் புத்தகத்தை தோலுரித்துக் காட்டினார். அமெரிக்கர்களின் மத்தியில் புத்தகத்தில் இருந்த கடன் கலாச்சாரம் எப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை விவரித்து விட்டு, வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்களும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு எப்படி அமெரிக்கர் களை கடன்வலையில் சிக்க வைத்தன என்பதையும் விவரித்துள்ளார். கடன் மோகத்தால் அமெரிக்கா எதிர் நோக்கியுள்ள சிக்கல்களை, முன்கூட்டியே எச்சரித்த ஸ்கிக்டர், இந்த செய்திப்படத்தின் நடுவே புரிய வைக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு காலத்தில் தொழிற்சாலைகள் நிரம்பியிருந்த அமெரிக்கா, வணிக வளாகங்கள் நிறைந்த நாடாக மாறியதோடு, உற்பத்தி செய்வதும் குறைந்து நுகர்வு கலாச்சாரம் தலைதூக்கியதே பிரச்சனையின் மூலக்காரணம் என்று அவர் கூறுகிறார். வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்களும் கடன் வாங்கி பொருட்களை வாங்குவதை ஊக்குவித்தன என்று சொல்லும் அவர் கடன் முதலைகள் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக உணர்த்தி யுள்ளார். வங்கி அதிபர்களும், நிதி நிறுவன முதலாளிகளும் தங்கள் லாபத்திற்காக விதிமுறைகளை அரசு தளர்த்த செய்த விதத்தையும், அவர் சுட்டிக்காட்டுகிறார். புலனாய்வு பத்திரிகையாளரான தமக்கே, கடன் வலையின் பின்னணியில் தெரிய வந்த விஷயங்கள் திடுக்கிட வைத்ததாக கூறும் ஸ்கிக்டர், பலரும் கடன் பிரச்சனையை உணர்ந் திருந்தாலும், ஒவ்வொருவரும் அதனை தனிப்பட்ட பிரச்சனையாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், உண்மையில் இது சமூக பிரச்சனை என்பதை யாருமே உணரவில்லை என்றும் கூறுகிறார். எல்லோருக்கும் சுலபக்கடன் வழங்கியதன் மூலம் கடன் வசதியை ஜனநாயக மயமாக்கியதாக சொல்லப் பட்டாலும், இதன் விளைவாக கடனுக்கு அடிமையான நிலையே ஏற்பட்டது என்றும் தெரிவிக்கிறார். கடன்பட்டு தவித்தவர்களின் அவலத்தை படம் பிடித்து காட்டும் போதே, இதனால் ஏற்படக்கூடிய விபரீதத்தையும் ஸ்கிக்டர் தனது படத்தில் கோடிட்டு காட்டியதாக விமர்சகர்களால் பாராட்டப் படுகிறார். ஒரு காலத்தில் உலக நாடுகளோடு தனது வளத்தை பகிர்ந்து கொண்ட அமெரிக்கா, வெளிநாட்டு வங்கிகளிடம் கடன்பட்டு நிற்கும் தேசமாக மாறியிருப்பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த மாற்றம் இது என்றும், இதன் விளைவாக கடனுக்கு அடிமையான குடும்பங்கள் அதிகரித்திருப் பதையும் அவரது செய்திப்படம் உணர்த்துகிறது. நிலைமை கைமீறி போவதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் வகையில் தேசிய அளவில் ஒரு விவாதத்தை தனது செய்திப்படம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இந்த நோக்கத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவரைப் போன்ற நிபுணர்கள் எச்சரித்தும் கூட அமெரிக்கா விழித்துக் கொள்ளவில்லை. இந்த செய்திப்பட வெளியீடு தொடர்பான பேட்டி ஒன்றில் ஸ்கிக்டர், “அதிகரித்து வரும் அமெரிக்கர்களின் கடன் பற்றி யாருமே பேசுவதில்லை’ என்று வருத்தப்பட்டதோடு, அமெரிக்கா வில் ராணுவ வளாகம் உட்பட எல்லா இடங்களிலும் கடன் முதலைகள் நுழைந்து விட்டன என்று கூறியிருக்கிறார். அவரது இந்த செய்திப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்த படம் பேசும் முக்கிய விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக இந்த செய்திப்படத் திற்காகவென்றே “இன் டெப்ட் வீ டிரஸ்ட்’ என்றும் பெயரில் இணைய தளம் ஒன்றை ஸ்கிக்டர் அமைத்திருக்கிறார். செய்திப்படத்தின் டிவிடியை இந்த தளத்தின் மூலம் வாங்க முடிவதோடு, கடன் கலாச்சாரம் தொடர்பான பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக தனியே வலைப்பதிவு ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். மேலும் வாரந்தோறும் கடன் பிரச்சனைகள் தொடர்பான செய்தி மடல் ஒன்றையும் வெளியிட்டு வருகிறார். அநேகமாக அமெரிக்கர்கள் தற்போது விரும்பி செல்லும் இணையதளங்களில் ஒன்றாக இந்த தளம் விளங்குகிறது. அமெரிக்கர்கள் இப்போது கடன் நிவாரணியை தேடிக் கொண்டிருக்கின்றனர். |
-
தேடுக!
-
சமீபத்திய உள்ளீடுகள்
- ஒருவல்லரசு கடனாளியான கதை -29
- நாட்டை அழித்த வங்கிகளின் வளர்ச்சி -28
- முடிவுக்கு வரும் அமெரிக்க பேரரசு -27
- ஒரு நிபுணரின் வாக்கு பலித்தது -26
- வருமுன் உரைத்த நிபுணர் -25
- கடனில்லா தேசம் செய்வோம்!
- சேமிப்பின் அருமை கடனில் தெரியும்-23
- கடனே தான் வாழ்க்கையடா -22
- வீதிக்கு வந்த அமெரிக்கர்கள் -21
- கந்துவட்டி கார்ப்பரேட் மயமானது -20
-
இணைப்புகள்